
புகையிரத திணைக்களத்தின் தெமட்டகொட டிப்போவிற்குள் நுழைந்த மூன்று திருடர்களை கட்டுப்படுத்த புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, புகையிரத நிலையத்திற்குள் பிரவேசித்த மூன்று திருடர்களில் ஒருவர் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை திருட முற்பட்ட போது, அங்கிருந்த ஏனைய புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவானது வானத்தை நோக்கி சுட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த மூன்று சந்தேக நபர்களில் இருவர் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
மேலும், குறித்த சந்தேகநபர்கள் புகையிரத நிலையத்திலிருந்து டீசல் செப்பு கம்பிகள் மற்றும் புகையிரத உதிரிபாகங்களை திருட முயற்சித்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.