
இம்மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் முழுப் பரீட்சை முடியும் வரை கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பரீட்சை திணைக்களத்தின் உத்தரவை மீறி யாராவது செயற்பட்டால், 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அவ்வாறானவர்கள் குற்றவாளிகளாவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கையொப்பமிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான ல்விப் பொதுத் தராதரத் தேர்வை மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை 3568 தேர்வு மையங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.