நாளாந்தம் உறுதிப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா இறப்புகளை கருத்தில் கொண்டு, தரை மட்டத்தில் வைரஸ் பரவுவதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் மீண்டும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.