
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி, குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தின் நிறைவேற்று சபை கலந்துரையாடி தீர்மானம் எடுக்கும் எனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.
இதன்படி, கா.பொ.தா உயர்தர விடைத்தாள்களை சரிபார்க்கும் பணியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில் பரீட்சை திணைக்களம் ஒரு சில வாரங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிடும் என தமது சங்கம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.