மின்சாரம், கனிய எண்ணெய் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, எரிபொருட்கள் வழங்கல் அல்லது விநியோகம் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக மாறியுள்ளதோடு மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய சேவைகள் இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக ஆக்கப்பட்திருக்கின்றன.
அத்தோடு, மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இந்த சேவைகள் அத்தியாவசியமானவை என தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி சேவைகள் தடைப்படலாம் அல்லது இடையூறு செய்யப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.