
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கையளிக்க முடியாது எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
முதற்கட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பின்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.