
மாலி மாநிலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் பயணித்த நால்வர் கண்ணிவெடியால் தாக்கப்பட்டனர்.
சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவரும் மேலும் மூன்று இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸின் தலைமை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், காயமடைந்த இராணுவ வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிடால் பகுதியில் உள்ள டெசாலிட் பகுதியில் உள்ள அவர்களது முகாமுக்கு வடமேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக டுஜாரிக் மேலும் தெரிவித்துள்ளதோடு வெடிப்புச் சம்பவத்தின் போது கவச வாகனத்தில் இருந்து சரக்கு வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கியதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.