
இந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.
இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தரவை மீறி யாராவது செயற்பட்டால், 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அவ்வாறானவர்கள் குற்றவாளிகளாவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கையொப்பமிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர தேர்வு மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை 3,568 தேர்வு மையங்களில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.