
தலவத்துகொட பிரதேசத்தில் உள்ளூர் வைத்தியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதேகுறித்த கைது இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, பிச்சைக்காரரான குறித்த சந்தேக நபர் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி உள்ளூர் வைத்தியரிடம் பணம் கேட்டதாகவும் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு சந்தேக நபர் வெல்பல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.