
அம்பலாங்கொட, அண்டடோல பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் பயணித்த நபர் மீது குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், மோட்டார் சைக்கிள் தோட்டாக்களால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன் தோட்டாக்களின் ஒரு பகுதி சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.