கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கான இக்கட்டான தருணத்தில், நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடியை உருவாக்க பல்வேறு குழுக்கள் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறந்த சமூகத்திற்கான பயணத்தில் மத ஸ்திரத்தன்மையை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், கொழும்பில் உள்ள அவரது அமைச்சின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு நபரும் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவும் இவ்வாறான குறுகிய நோக்கத்துடன் செயற்பட முற்பட்டால், இலங்கையின் அரசியலமைப்பின் 9வது அத்தியாயம் மற்றும் 291 (a), (b) இன் படி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தயங்க மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.