நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலி ஆவணம் தயாரிக்கும் நிலையத்தை நடத்தி வந்த சந்தேகநபர்கள் இருவர் மற்றும் பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ராஜகிரிய விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட மூவரும் நாரஹேன்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும், அவர்கள் இன்று (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.