இலங்கை சுங்க மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று பிரான்ஸ் நாட்டின் பரிஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இலக்கம் UL 501 இல் இலங்கை வந்த சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது, அதில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, குறித்த தங்கப் கையிருப்பின் மொத்த எடை 4 கிலோ 611 கிராம் என்பதுடன் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 85 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என இலங்கை சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.