
நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பிற்கு அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் நேற்று பிற்பகல் கூடி ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் மகிந்தானந்த அளுத்கமவின் சபை உறுப்பினர் தவிர்ந்த ஏனைய மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.