
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கோதுமை மா “குறிப்பிட்ட பொருட்கள்” என்ற கீழ் பட்டியலிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அத்தியாவசியப் பொருளாக உள்ள கோதுமை மாவினை2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் அத்தியாவசியப் பொருளாக 2023 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் “குறிப்பிட்ட பொருட்களின்” கீழ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 8 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் குறிப்பிட்ட பொருளாக இருந்த எரிவாயு, அந்தப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.