
ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த முறைப்பாட்டின் சாட்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள சதொச நிறுவனத்தின் ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி கித்சிறி சில்வாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த சாட்சி ஏப்ரல் 15ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.