
இந்தியா உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இஅடையில் இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான உத்தேச திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கையில் உள்ள இடங்களுக்கு விமானங்களை இயக்க பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, டிஜிட்டல் மயமாக்கல், மாற்று எரிசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்தியா முதலீடுகளை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார்.
மேலும், இலங்கையின் கடனை நிலைநிறுத்துவதற்கு பொருளாதார நெருக்கடியின் போது MF திட்டத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.