
சிறுவர்களிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி,டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே பரவி வருவதாக ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.