
அம்பலாங்கொடை நகரில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டியில் சென்ற நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் அம்பலாங்கொடை ரண்டோம்பே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.