
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, துப்பாக்கிச் சூடு நடந்த போது காயமடைந்தவர்களும் மேலும் இருவர் காரில் பயணித்துள்ளனர். கனகாபுரம் பகுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.