
மக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்து வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த திட்டத்தின் கீழ் எந்த கட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் மக்களின் பணத்தை எடுத்துச் சென்று வங்கி முறையை தகர்த்தெறிய வேண்டும் என்பதே போராட்டக் கட்சிகளின் கோரிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், திறைசேரியால் வழங்கப்பட்ட உண்டியல்கள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்த எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியதோடு இது தொடர்பான விவாதம் நாளை (01) நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.