
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான அடுத்த கட்ட விண்ணப்பங்கள் நாளை மறுதினம் அழைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் இருந்து குழு தெரிவு செய்யப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அத்தோடு, தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.