
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இதன்படி, குறித்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென் மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹை யீன் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, சர்வதேச கார்பன் வர்த்தகத்தின் கீழ் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன் செலவு குறைந்த முறையில் ஒத்துழைக்க நாடுகளுக்கு வாய்ப்பளிக்கும் வாய்ப்பை பாரிஸ் ஒப்பந்தத்தின் 6வது பிரிவு வழங்குகிவழங்குவதோடு கார்பன் விவகாரத்தில் இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பாரிஸ் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நடுநிலைமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் குறித்த பயணத்தில் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றும் நாளையும் ஜனாதிபதி நாடளாவிய ரீதியில் வெளியில் இருக்கும் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார். எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பஸ்குவால் பெண்கள், சிறுவர் விவகாரங்களுக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.