
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிப்பு பேக்கரி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் ஆனால் பேக்கரி தொழில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.