
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் குறித்து இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுவதோடு திருகோணமலைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, சர்ச்சைக்குரிய சீனா Xiang Six கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததன் பின்னணியில் இந்தியா பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு இலங்கைக்கான விஜயத்திற்கு தயாராகி வருவதக்கவும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு குறித்த சீனாக் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு சீனாவின் யுவன் வேன் ஃபைவ் கப்பல் இலங்கைக்கு வந்தபோது, இந்தியா அரசும் குறித்த விடையம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் சீனா வெளியிட்டுள்ள சமீபத்திய வரைபடத்தின் அடிப்படையில், இந்தியாவின் ஒரு பகுதியைத் தவிர்த்து, இரு தரப்பினருக்கும் இடையே பெரும் சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ள இந்தப் பின்னணியில் சீனக் கப்பலுக்கு நாட்டு கடல் எல்லைக்குள் பிரவேசிக்க இலங்கை அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.