
பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவிகளினுடைய மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல்களை கோரிய அதிபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி கோட்டத்திற்குற்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளினுடைய மாத விடாய் காலம் தொடர்பில் தகவல் கோரியுள்ளதாக கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் காரியாலயத்தில் 23.08.2023 முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, குறித்த முறைப்பாட்டினை குறித்த மாணவ தலைவி உற்பட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதோடு பாடசாலை அதிபருக்கு குறித்த விடயம் தொடர்பில் விசாரிப்பதற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலையின் அதிபர் குறித்த மாணவ தலைவியினை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளினுடைய வரவு வீதமானது குறைந்துள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் காலம் என தான் அறிவதாகவும் தெரிவித்துள்ளதுடன் ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாயானது எந்த மாணவிக்கு ஏற்பட்டிருக்கின்றது எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடையும் என்பதோடு மாதவிடாய் காரணமாக தான் மாணவிகள பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்க வில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து அதனை சொல்ல வேண்டும் என அதிபர் பணித்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையில் உள்ள சில மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளனர்.