
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு குறித்த இளைஞனின் முகப்புத்தகத்தின் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எப்பாவெல பிரதேசத்த்தினைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வருகின்ற வியாழக்கிழமை (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயமொன்றினை செய்யவுள்ள சூழ் நிலையில் சந்தேகநபரான குறித்த நபர் அவருடைய முகப்புத்தகத்தில்குறித்த விஜயம் தொடர்பில் பதிவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, “ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரைக் கண்டு பிடிக்க முடியுமா? நாட்டை சீரழித்தவர் வருகிறார்” என சந்தேக நபர் குறித்த பதிவில் பதிவிட்டுள்ளார்.
மேலும், பதிவு குறித்து உடனடியாக அறிந்து கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.