
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனனமானது காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இதன்படி, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி 2005 இலிருந்து ராஜபக்ஷக்களின் குடும்பத்தினை பிழையாக சித்தரிக்கும் நோக்கில் குறித்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ராஜபக்ஷக்களுக்கு எதிராக குறித்த ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போன்ற இதுவும் பொய்கள் நிறைந்த காணொளி என கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.