
அதிகளவான பணத்தினை செலவு செய்கின்ற 10 அமைச்சுக்களினுடைய செலவுகளினை ஆராய்வதற்க்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று (08) இடம்பெற்ற “தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக் கட்டமைப்பை” வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தேசிய கொள்கைப் பொறிமுறையின் அடிப்படையில் மின்சார விநியோகத்தை அனுமதிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.