
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபா வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வரியானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுலுக்கு வரும் என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட சரக்கு வரியை 04 மாதங்கள் வரை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
மேலும், மார்ச் 8 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபா விசேட சரக்கு வரியை விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வரியானது 06 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.