
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாகவுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்போதைய சொல் நிலையில் சுமார் 8 ஆயிரம் பேர் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களாக கடமையாற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த ஊழியர்களுக்கு பணியினை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனைகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.