
(பாறுக் ஷிஹான்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண்ணொருவர் போலியான ஆவணங்களினை சமர்ப்பித்து தன்னை மோசடியான முறையில் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாகவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கமைய இன்று (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வருகின்ற ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரையானகலப்பகுதிக்கு குறித்த வழக்காணாது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரே தனது சகோதரர் சகிதம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
அதில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்துள்ளதாகவும் பின்னர் மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடாத்தினார் எனவும் பின்னர் தன்னை ஏமாற்றி தலை மறைவாகி இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்டிருந்த ஆவனத்தினுடைய பிரதான சாட்சியான குறித்த ஆசாத் மௌலானா என்பவர் தற்போது இருந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் 2019.09.29 திகதி அன்று குறித்த திருமணம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் எனும் பகுதியில் நடைபெற்றுள்ளதுடன் வரவேற்பு உபசாரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றதாக்க தெரிவித்துள்ள நிலையில் இறக்காமம் பள்ளிவாசல் குறித்த திருமணம் தொடர்பில் மறுத்துள்ளதோடு போலியாக தமது பள்ளிவாசலின் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு இம்மோசடி திருமணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பில் குறித்த பெண்ணை ஆஸாத் மௌலானா என்பவர் தனது முதலாவது திருமணத்தை மறைத்து மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதோடு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக இருக்கின்ற நிலையில் அவர் மீதான குறித்த வழக்கு தாக்கலானது மிகப்பெரிய சந்தேகங்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது .
இதேவேளை, குறித்த பெண்ணினுடைய குற்றச்சாட்டினை தொடர்ந்து தற்போது ஆஸாத் மௌலானாவினுடைய வெளிநாட்டு தஞ்சம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படுதல் மற்றும் அவரை ஒரு ஏமாற்று பேர்வழியாக இனங்காட்டி இவ்வழக்கினை மேலும் வலுவாக்குவதற்கு மூன்றாம் தரப்பு ஒன்று முயற்சி செய்து வருவதாகவும் தற்போது
அறிய முடிகின்றது.
இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படமானது
கடந்த 2021 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தினத்தண்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு இயங்கின்ற செனல் 4 ஊடகமானது வெளியிட்ட காணொளியானது கடந்த 5ஆம் திகதி வெளிடப்பட்டிருந்ததுடன் பிள்ளையான் தலைமைவகிக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய ஊடகப் பேச்சாளராகவும் செயல்பட்ட ஹன்ஸீர் ஆசாத் மௌலானா, செனல் 4 காணொளியின் பின், இலங்கை அரசியலிலும் மக்கள் மத்தியிலும் பாரிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதன்படி, ஆசாத் மௌலானா 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாணந்துறையில் உள்ள தனது மாமியினுடைய (தந்தையின் சகோதரி) மகளினை திருமணம் செய்ததோடு பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்தார். ஆனால், குறித்த பெண்ணோடு குறுகிய காலத்திலேயே அந்தப் பெண்ணுடன் விவாகரத்தாகி விட்டது என்பது குறிப்பிட தக்க விடையமாகும்.
மேலும், பிள்ளையானுடைய தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கத் தொடங்கியதன் பின்னர், அதனுடைய பேச்சாளராகவும் ஆசாத் மௌலானா நீண்ட காலம் செயல்பட்டத்தோடு பிள்ளையானின் நிதிப் பொறுப்பாளராக இருந்ததுடன் கிழக்கு மாகாண சபையினுடைய முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்த காலகட்டத்தில் அவரினுடைய பிரத்தியேக செயலாளராகவும் குறித்த ஆசாத் மௌலானா பணியாற்றியுள்ளார்.
ஆகவே, இவ்வாறு பிள்ளையானுடைய நீண்டகாலமான் நெருக்கத்தினையுடைய குறித்த ஆசாத் மௌலானா, கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுவதோடு தற்போது அவர் ஐரோப்பிய நாடொன்றில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் செனல் 4 ஆவணத்துக்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முறைப்பாடு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் குறித்த ஆசாத் மௌலானா சமர்ப்பித்துள்ளதக்க தெரிய வந்துள்ளது.