
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சு பதவி வழங்குமாறு பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளிக்காமையால் ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சலுகைகள் தொடர்பிலும் இரு தரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதோடு எதிர்கால அரசியல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.