
“தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் பங்கு” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள “G77” நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .
ஜி77 உச்சி மாநாடு கியூபாவின் ஹவானாவில் செப்டம்பர் 14 முதல் 16 வரை நடைபெறுகின்றது.