
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ முன்னதாக அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் இந்த அறிவித்தலை விடுத்தார்.
மேலும், குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக் கோப்புகளை ஆராய்ந்த சட்டமா அதிபர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பூர்த்தி செய்யுமாறு மனுதாரர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் பணிப்புரை விடுத்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதேவேளை, புவனேக அலுவிஹாரே, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த மனு தொடருமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வகையில், ஜனக் டி சில்வா அடங்காத நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அதனை எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.