
கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா சாகுபடி மேற்கொள்ளப்படும் என மற்றுமொழி வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால் வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்கா டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.