
நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வருகைத்தரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபினுடைய நினைவு தினத்தினை வைத்து அரசியல் செய்யவும் கூடாது என சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகைஇணைத்தொடர்ந்து தொடர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இதன்படி, நாளையா தினம் (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய ஸ்தாபக தலைவரான முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபினுடைய 23 வது நினைவு நாள் என்பதினால் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக குறித்த நிகழ்வினை ஏற்படு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும், பொதுசேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸினுடைய கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமாகிய ஏ.எல்.எம். சலீம் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், ஏனைய கட்சிகளினுடைய முக்கியஸ்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களினுடைய பிரதானிகள் உட்பட பலர் குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பிரமுகர்கள் எதிராக கோசம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வரான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களினுடைய உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டதோடு சாய்ந்தமருது பொலிஸார் வீதி போக்குவரத்துக்களை சீர்செய்ததோடு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
மேலும், கோஷமெழுப்பிய போராட்டகாரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.