
எதிர்காலத்தில் நாட்டிநாட்டினுடைய பொருளாதாரத்தினை தனியார் துறையினரால் இயக்கப்படஉள்ளதாகவும் அரசாங்கம் ஒழுங்குபடுத்தக்கூடிய அதிகார சபையாக மாத்திரமே செயற்படவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில், அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும், நமது பொருளாதாரம் தனியார் துறையால் இயக்கப்படும். எனவே, அரசு ஒரு ஒழுங்குமுறை ஆணையமாக மட்டுமே செயல்படும் எனவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் அதிக ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் சேமசிங்க, அந்த நேரத்தில் வரி நிர்வாக முறையை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறந்த முறையில் நாங்கள் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதைப் பார்க்கலாம்”, “இருப்பினும், நாங்கள் முதலில் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி பலப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியதோடு 2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிக்க உத்தேசித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.