
இன்று (24) காலை கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வேன் ஒன்றில் வந்த நபர்கள் வழிமறித்து சாரதியை கடத்திச் சென்றதாகவும் குறித்த பேருந்து சாரதி வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.