
மொனராகலை – புத்தல பிரதேசத்தில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதா புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (25) இரவு 11.20 மணியளவில் குறித்த நிலநடுக்கம் 2.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாகவும் மொனராகலை மற்றும் படால்கும்புர ஆகிய பகுதிகளிலும் இந்த அதிர்வின் தாக்கம் இருந்ததாகவும் புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.