
முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வாகன உதிரிபாகங்களை வரியின்றி இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, உத்தேச நடவடிக்கையானது இந்த இறக்குமதிகள் மூலம் ஈட்டப்படும் வரியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார்.
மேலும், கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்,இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே மேலும் விளக்கமளிக்கையில், “இதன் மூலம் அவர்களுக்கு இலங்கையில் வாகனங்களை ஒன்று சேர்ப்பதற்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அவர்கள் வரியின்றி உதிரிபாகங்களை இறக்குமதி செய்யலாம் மற்றும் வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.