
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், போலியான 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
அத்தோடு, குறித்த சந்தேகநபரிடம் இருந்து 02 போலியான 5000 ரூபா நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.