
உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், தெற்காசியப் பிராந்தியத்தில் அதிக மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி ஆலோசகர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, தெற்காசியாவில் அதிகூடிய மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட முதல் மூன்று நாடுகளில் இலங்கை தற்போது இருப்பதாக கலாநிதி சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மின்சார உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்கும் வகையில் புதிய முறையொன்றை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.