
2023 கா.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் இன்று புதன்கிழமை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2023 கா.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முந்தைய பரீட்சை அமர்வில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் 2022 கா.பொ.த உயர்தர பரீட்சையின் மறு ஆய்வு காரணமாக கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக 2023 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள். உயர்தரப் பரீட்சை அமர்வு 2023 அமர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 06 முதல் 10 ஆம் திகதி வரை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2023 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/onlineapps/ ஊடாகவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகவோ சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிப்பட்டுள்ளது.