
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை இந்த நாட்களில் குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படுவதாக மேலும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போது பெய்து வரும் மழையுடன், சில பகுதிகளில் குளிர் காலநிலையும், வேறு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக பல நோய்கள் வேகமாக பரவுவதை நாங்கள் அவதானித்து வருகிறோம்.
“குறிப்பாக, குழந்தைகளில் ஆஸ்துமா கணிசமாக அதிகரித்துள்ளது,” என மேலும் வைத்தியர் தெரிவித்துள்ளார் .
மேலும், குளிர் வெப்பநிலை காரணமாக வைரஸ் சுவாச தொற்றுகள் அதிகரித்துள்ளதாகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆஸ்துமா உள்ள பிள்ளைகள் உரிய சிகிச்சைகளை முறையாகப் பெற வேண்டும், புகைபிடிக்கும் வீட்டு அங்கத்தவரிடமிருந்து இரண்டாவது கை புகைப்பழக்கத்திற்கு ஆளானால் அவர்களின் நிலைமை மோசமடையக்கூடும் எனவும் சில உணவுப் பொருட்களும் இந்த நிலையை மோசமாக்கும் என்றும் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.