
கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (15) இரவு சபுகஸ்கந்த பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யவிருந்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் சபுகஸ்கந்த பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவரைக் கைது செய்வதற்காக கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும் இதன்போது, குறித்த நபர் வீட்டுக்குள் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், 49 வயதான சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்தவரின் சடலம் கிரிபத்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.