
இரண்டு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன, கியூபா குடியரசின் புதிய உயர்ஸ்தானிகராக ஓய்வுபெற்ற அட்மிரல் தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன ஆகியோரின் நியமனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உயர் பதவிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.
மேலும், நேபாளத்துக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஓய்வுபெற்ற எயார் சீஃப் மார்ஷல் சுதர்சன் கரகொட பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் உயர் பதவிகளுக்கான குழுவானது வியாழக்கிழமை (ஒக்டோபர் 19) பாராளுமத்தில் கூடிய நிலையில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்கோரள, உதய கம்மன்பில, கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கலந்துகொண்டனர்.