
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அமைத்துள்ளது.
இதன்படி, 0094711 757 536 அல்லது 0094711 466 585 என்ற எண்ணுக்கு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் சூழ்நிலைகள் தொடர்பாக அவர்களுக்குத் தேவைப்படும் ஏதேனும் கவலைகள் அல்லது உதவிகள் தொடர்பாக தெரிவிப்பதற்க்காகவே குறித்த எண் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சு, தூதரக விவகாரங்களை வழமையான அலுவலக நேரங்களில் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் repatriation.consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், டெல் அவிவ் (இஸ்ரேல்) மற்றும் ரமல்லா (பாலஸ்தீனம்) ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.