
குடிபோதையில் வாகனத்தை செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பேரில்கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான ரவி செனவிரத்னவினை எதிர்வருகின்ற 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (29) நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை நோக்கி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓட்டிச் சென்ற கார், வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் உள்ள மிராஜ் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரையும் பஸ்ஸையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
சுவாச பரிசோதனையின் போது முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குடிபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்தே, கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவான் கோஷல சேனாதீர, அவரை நவம்பர் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.