
கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கடந்த 27ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை – 2ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் இடம்பெற்ற பாரிய தீ பரவலில் சிக்குண்டு சுமார் 23ற்கும் அதிகமானோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் 11 பெண்கள் அடங்குவதாகவும் அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த யுவதி ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த யுவதி, வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும்
குறித்த தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றார்கள்.